சனி, 3 ஜனவரி, 2009

கிளிநொச்சி வீழ்ந்ததா ?

கிளிநொச்சி வீழ்ந்ததாக சிங்களப்பார்ப்பனர்கள் கூக்கிரலிடுகிறார்கள். ஆனால், இதற்காக சிங்கள ராணுவம் சந்தித்த உயிரிழப்பு மிக அதிகம் ! இதுவரை 18 ஆயிரம் ராணுவ வீரர்கள், வன்னி நடவடிக்கை ஆரம்பித்த பின்பு கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனால், குழந்தைவீரர்களையும் படையில் சேர்த்துப் போரிட சிங்கள ராணுவம் நிர்பந்திக்கப் பட்டுருக்கிறது. இந்த குழந்தகளின் பிணங்களையும் புலிகள் மீட்டு இருக்கிறார்கள்.

ஆக வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வியட்நாமியப் போராளிகள் கையாணட அதே போர்தந்திரத்தை, புலிகள் இப்போது பின்பற்றி இருக்கிறார்கள்.
தங்களுடைய ஆயுதங்களையும், போராளிகளையும் பின்நகர்த்திய புலிகள், தங்கள் போராட்ட பலத்தினை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வியட்நாமிய போராளி ஒருவரைப் பார்த்து, ஒரு அமெரிக்கச் சிப்பாய், வியட்நாமியப்போரில் ஒவ்வொரு ஒரு போரிலும், உங்களை நாங்கள் தோற்கடித்தோம்." அதற்கு அந்தப்போராளி, "அது உண்மைதான். ஆனால், மொத்த போரில் நாங்கள் தான் வென்றொம்" என்றார்.

ஆகவே, இந்த சின்ன சின்ன தந்திரோபாய பின்னகர்வுகளை - ஆயிரக்கணக்கான சிங்கள அயோக்கியர்களைக் கொன்று - போராட்ட சக்தியை தக்கவைக்கும் தந்திரோபாத்தை கண்டு மனம் தளரக் கூடாது.